Choose a track to play
சிப்பாபிபபே...மனம் பிப்பாபிபபே
ரேடியே
ஹே... புடித்தது
அமளி துமளி நெளியும் வெளி
என்னை கவ்வி கொண்டதே
அழகு இடுப்பின் ஒரு பாதி
என்னை அள்ளிச் சென்றதே
கொலம்பஸ் கனவிலும் நினைக்காத
ஒரு தேசம் அழைக்குதே
கொளுத்தும் வெயிலிலும் எனக்குள்ளே
குளிர் காற்றும் வீசுதே
ரோஜா பூவும்
அடி முள்ளில் பூக்கும் என அறிவேன்
பேனா முள்ளில்
இந்த பூவும் பூப்பது ஒரு மாயம்
மாறி மாறி
உன்னை பார்க்க சொல்லி விழி கெஞ்சும்
எந்தன் நெஞ்சோடு நெஞ்சோடு
காதல் பொங்கி வருதே (ஓஓஓ)
அமளி துமளி நெளியும் வள்ளி
என்னை கவ்வி கொண்டதே
அழகு இடுப்பின் ஒரு பாதி
என்னை அள்ளிச் சென்றதே
ஹே கொலம்பஸ் கனவிலும் நினைக்காத
ஒரு தேசம் அழைக்குதே
கொளுத்தும் வெயிலிலும் எனக்குள்ளே
குளிர் காற்றும் வீசுதே
ஹே...ஹே...ஏ எவர்தையேயே
வா என சொல்லவும் தயக்கம்
மனம் போ என தள்ளவும் மறுக்கும்
இங்கு காதலின் பாதையில் அனைத்தும்
அட பெரும் குழப்பம்
ஆறுகள் அருகினில் இருந்தும்
அடைமழை அது சோவென பொழிந்தும்
அடி நீ மட்டும் தூரத்தில் இருந்தால்
நா வறண்டு விடும்
ஹே கூவா கூவா கூவா கூவா குயிலேது
ஹே தவ்வா தவ்வா தவ்வா தவ்வா மனமேது
ஓ முதல்மழை நனைத்ததை போலே
முதல் துணை அடைந்ததை போலே
குதிக்கிறேன் குதிக்கிறேன் மேலே ஆருயிரே
ஓ எனக்குனை கொடுத்தது போதும்
தரைத்தொட மறுக்குது பாதம்
எனக்கினி உறக்கமும் தூரம் தேவதையே
அமளி துமளி நெளியும் வள்ளி
என்னை கவ்வி கொண்டதே
அழகு இடுப்பின் ஒரு பாதி
என்னை அள்ளிச் சென்றதே
கொலம்பஸ் கனவிலும் நினைக்காத
ஒரு தேசம் அழைக்குதே
கொளுத்தும் வெயிலிலும் எனக்குள்ளே
குளிர் காற்றும் வீசுதே
கால்களில் ஆடிடும் கொலுசு
அதன் ஓசைகள் பூமிக்கு புதுசு
அதை காதுகள் கேட்டிடும் பொழுது நான் கவியரசு
மேற்கிலும் சூரியன் உதிக்கும்
நீர் மின்மினி சூட்டிலும் கொதிக்கும்
அட அருகினில் நீ உள்ள வரைக்கும்
மிக மண மணக்கும்
ஹே பூவா பூவா பூவா பூவா சிரிப்பாலே
ஹே அவ்வா அவ்வா அவ்வா அவ்வா தீர்த்தாயே
ஹே சூடாமலே அணிகலன் இல்லை
தொடாமலே உடல் பலன் இல்லை
விடாமலே மனதினில் தொல்லை காதலி
தொடத் தொட இனித்தடை இல்லை
இடைவெளி மிகப்பெரும் தொல்லை
அடையாளம் மகிழ்ச்சியின் எல்லை
ஊடலிலே ஓஹோ
அமளி துமளி நெளியும் வள்ளி
என்னை கவ்வி கொண்டதே
அழகு இடுப்பின் ஒரு பாதி
என்னை அள்ளிச் சென்றதே
கொலம்பஸ் கனவிலும் நினைக்காத
ஒரு தேசம் அழைக்குதே
கொளுத்தும் வெயிலிலும் எனக்குள்ளே
குளிர் காற்றும் வீசுதே
ரோஜா பூவும்
அடி முள்ளில் பூக்கும் என அறிவேன்
பேனா முள்ளில்
இந்த பூவும் பூப்பது ஒரு மாயம்
மாறி மாறி
உன்னை பார்க்க சொல்லி விழி கெஞ்சும்
எந்தன் நெஞ்சோடு நெஞ்சோடு (ம்ம்ம்)
காதல் பொங்கி வருதே (ம்ம்ம்...எவர்தையே)