மாயையான இந்த உலகினிலே
பாவியான என்னை தேடிவந்தீரே
நீர் இல்லா வாழ்க்கை இனி
வாழ்க்கையில்லை
நிலையிலலாத இந்த உலகினிலே
கால்களை உறுதியாக்கிணீரரே
உம்மை விட்டு நானும் எங்கே செல்வேன்
என் இயேசுவே
தேனிலும் இனிமையானவரே
பாடலின் ராகமுமானவரே
உம் நாமம் உயர வேண்டும்
பூவிலே மாந்தர் பாடவே
தனிமையான இந்த வாழ்வினிலே
மகிமையை தந்த மகத்துவரே
நீர் இல்லா வாழ்க்கை இனி
வாழ்க்கை இல்லை
தூய்மையாய் என்னை மாற்றுகிறீர்
செமையான வழியில் நடத்துகிறீர்
உம்மை விட்டு நானும் எங்கே செல்வேன்
என் இயேசுவே
தேனிலும் இனிமையானவரே
பாடலின் ராகமும்மானவரே
உம் நாமம் உயர வேண்டும்
பூவிலே மாந்தர் பாடவே
நீர் இல்லா வாழ்க்கை வாழ்க்கையில்லை
அங்கும் இங்கும் அலைந்த போதும்
நிம்மதி இல்லை
உம்மையே நானும் பற்றிடுவேனே
இன்பத்திலும் துன்பத்திலும்
நம்பிடுவேனே
தேனிலும் இனிமையானவரே
பாடலின் இராகமுமானவரே
உம் நாமம் உயர வேண்டும்
பூவிலே மாந்தர் பாடவே
தேனிலும் இனிமையானவரே
பாடலின் இராகமுமானவரே
உம் நாமம் உயர வேண்டும்
பூவிலே மாந்தர் பாடவே