Choose a track to play
Single / Track
விழிக்குத்துணை திருமென் மலர் பாதங்கள்
மெய்மை குன்றா மொழிக்குத்துணை, முருகா எனும் நாமங்கள்
முன்பு செய்த பழிக்குத்துணை, அவன் பன்னிருதோளும் பயந்ததனி வழிக்குத்துணை
வடிவேலும், செங்கோடன் மயூரமும்!
வண்ணமயில் ஏறும் என் தங்க வடிவேலோ?
கந்தன் உன்னை காண தினம் ஓடிவருவேனோ?
செந்தமிழை காக்கும் வேல், சேவல் கொடியானோ?
எண்ணி-எண்ணி பாடும் என்னை கந்தன் அறிவானோ?
தோளிலே பால் காவடி சுமந்து
ஓடினேன் மேடு, பள்ளங்கள் கடந்து
ஆடினேன் அவன் ஆலயம் நுழைந்து
பாடினேன் வடிவேலனை நினைத்து
தோளிலே பால் காவடி சுமந்து
ஓடினேன் மேடு, பள்ளங்கள் கடந்து
ஆடினேன் அவன் ஆலயம் நுழைந்து
பாடினேன் வடிவேலனை நினைத்து
தந்தைக்கு உபதேசம் செய்து, சுவாமிமலை ஆள்பவன் நீ
மாம்பழத்தில் கோபம் கொண்டு பழனிமலை ஆண்டவன் நீ
பொங்கு கடல் ஓரமாக செந்தூரிலே வாழ்பவன் நீ
வள்ளி தெய்வயானையுடன் திருந்தணிகை நாயகன் நீ
தனக்கொரு தனித்துவ படையென, நிலமென
வான்மயில் ஏறியவன் முருகன், பாடங்கள் சொன்ன மகன்
யாரும் எனக்கில்லையென நாதியற்று நான் கலங்க
ஆறுதல் தந்த மகன் முருகன், ஆறுதோள் வென்ற மகன்
வா, என்னை காக்கும் வடிவேலய்யா
நீ இன்றி வேறுதுணை யாரய்யா-யாரய்யா?
வா, என்னை காக்கும் வடிவேலய்யா
நீ இன்றி வேறுதுணை யாரய்யா-யாரய்யா?
பொதிகையில் பிறந்து முருகன் வளர்ந்த கதையும்
பிரணவப்பொருள் மறந்ததில் வேல் சினத்தன்று கொடுத்த சிறையும்
வள்ளி தெய்வயானையுடனே காட்சி அருளும்
தணிகையின் நாயகன் உன்னை காணயில் இன்னல் ஓடி மறையும்
எந்தனை ஆளும் சுந்தர வேலும்
சேவல்கொடி ஏறும் செந்தமிழ் நாடும்
கந்தனை பாடும் எந்தனின் நாவும்
பாடும் பொழுதொரு துன்பங்கள் தீர்க்கும்
குமரனை கண்டதும் எனக்கு கவலை இல்லடா, குன்றத்துக்கு குமரன் எல்லடா
என்றைக்குமே முருகன நான் மறந்ததில்லடா
அந்தி அடங்கா நான் கடம்பன் புள்ளடா, கடம்பனை மறந்ததில்லடா
மண்டியிட்டு மண்ணில் விழ என்ன விட்டதும் இல்லடா
அஞ்சி அடங்கா நான் அரக்கன் அல்லவா? அறுந்தமிழ் கிறுக்கன் அல்லவா?
ஆறுமுகன் ஆளும் மண்ணில் வாழும் தமிழன் அல்லவா?
ஆக்குற ஆறிரு தோளுடன் காக்குற கருணையின் வேல் அது
அய்யனின் பன்னிரு கைகளும் காக்குற கடமையில் பாயுது
குற்றம் குறை சற்றும் இனி தொட்டும் தொடராமல்
என்னைக்காக்கும் கந்த கடம்பா, பழனி பதிவாழ் முருகா
வெட்டுப்பற அடி முழங்குது, வெற்றிவேலாயுதன் படை இறங்குது
முட்டும் கடல் முந்தி அடிக்குது, கந்தனை காண கண் தேடி துடிக்குது
காலடிகள் தாண்டி தூக்கிய காவடிகள், கடம்பனைப் போற்றிய காவடிகள்
சக்திக்கிரை முத்துக்குமாரனின் முத்தமிழ் பேரலைகள்
வா, என்னை காக்கும் வடிவேலய்யா
நீ இன்றி வேறுதுணை யாரய்யா-யாரய்யா?
வா, என்னை காக்கும் வடிவேலய்யா
நீ இன்றி வேறுதுணை யாரய்யா-யாரய்யா?