அஹ்ஹ்ஹ அஹ்ஹ்ஹ
ஆஹ்ஹ அஹ்ஹ்ஹ
க ரி க ஸ ரி தா ஸ ரி ஸ ரி த ஸ ப க
அஹ்ஹ்ஹ அஹ்ஹ்ஹ
ஆஹ்ஹ அஹ்ஹ்ஹ
எனது கானம் உன் காதில் விழவில்லையா
உன் நெஞ்சை தொடவில்லையா
பொண்ணுக்கு பூவும் பொட்டுந்தான் வேணும்
பெண்ணாக இருந்தும் அதை நீ பறிப்பாயோ ஓஓஹோ ஓஓ
எனது கானம் உன் காதில் விழவில்லையா
உன் நெஞ்சை தொடவில்லையா
வேரினை இழந்த மரம் எங்கு வாழும்
அவரையும் பிரிந்து நான் எங்கு வாழ்வேன் ஓஹோ ஓஹோஓ
வேரினை இழந்தும் ஆலமரம்
விழுதுகள் தாங்க வாழுமே
வேரினை இழந்தும் ஆலமரம்
விழுதுகள் தாங்க வாழுமே
விழுதென குழந்தைகள் இருப்பதை மறப்பதா
இதயத்தை இழந்த பின்னாலே
தேகத்தைக் காக்க முடியாதே
நீயே என் இதயம் இல்லையேல் இல்லை உதயம்
எனது கானம் உன் காதில் விழவில்லையா
உன் நெஞ்சை தொடவில்லையா
பிள்ளைகள் வாழ்வே என் கண்ணில் இருக்க
கலங்காது நீயும் ஆளாக்க வேணும் ஓஹோஓஓ
கண்ணாக உன்னை நான் மதிக்கின்றபோது
பார்வையை துறந்து வாழ்வது ஏது ஓஹோஓ
கண்களை இழந்த குருடனும்
கோலூன்றி உலகில் வாழ்கிறான்
கண்களை இழந்த குருடனும்
கோலூன்றி உலகில் வாழ்கிறான்
நம்பிக்கை வைத்திடு நம் சந்ததி வளர்த்திடு
அம்மா நீயும் அழுவாதே
உன்னை நான் காப்பேன் கலங்காதே
துடுப்பாய் இருப்பேன் கரை நான் சேர்ப்பேன்
எனது கானம் உன் காதில் விழவில்லையா
உன் நெஞ்சை தொடவில்லையா
மகனே நீ வளர மனம் போல வாழ்த்து
உன் கையில் பொறுப்பு குடும்பத்தை காப்பாத்து ஓஹோ ஓஓ