Elige una pista para reproducir

எதற்காக மறுபடி இரு விழியில் விழுந்து வழிந்தான்?
எதற்காக மறுபடி அவனை மறந்த மனதை கடந்தான்?
அலையா அந்நாளிதா?
அவனால் புண்ணானதா?
இதமும் இருளும் கலந்து உயிரில் விழுதா?
சிரிக்க மறந்த இரண்டு இதழும் படுதா?
அமைதி அடைந்த கடலில் புயலும் வருதா?
அவனின் நினைவு வலியில் படைத்த விருதா?
தேளாக நாள் மாறுதா?
நீ கேட்ட புன்னகை உன்னோடு போனதே
நான் கோர்த்த மின்னலை களவாடி போனதே, ஹே
கண்ணாடி ஒன்று தான் சிரிப்போடு பார்க்குதே
நகை ஆடி தீர்க்குதே, தேளாக நாள் மாறுதே
காதல் நதியில் ஓர் அலையென ஆடி மகிழ்ந்தேன்
ஞான கரையில் வந்தெழுந்தவள் ஈரம் துறந்து விட்டேன்
விலகினீர் என் தடாகமே, என் கலாபமே, என் விவாதமே
உன் விலாசமே வதை
நான் இன்று இல்லையே, முகமூடி தான் இது
நீ பார்த்த பால் நதி, நீர்வீழ்ச்சியாய் ஆனது