Elige una pista para reproducir
Sencillo / Pista
உனக்காக பொறந்தேனே எனதழகா
பிரியாம இருப்பேனே பகல் இரவா
உனக்காக பொறந்தேனே எனதழகா
பிரியாம இருப்பேனே பகல் இரவா
உனக்கு வாக்கப்பட்டு வருஷங்க போனா என்ன
போகாது உன்னோட பாசம்
என் உச்சிமுத பாதம்வர என் புருஷன் ஆட்சி
ஊர் தெக்காலதான் நிக்கும் அந்த முத்தாலம்மன் சாட்சி
எனக்காக பொறந்தாயே எனதழகி
இருப்பேனே மனசெல்லாம் உன்ன எழுதி
ஒருவாட்டி என உரசாட்டி உன
உறுத்தும் பஞ்சண மெத்தையும் ராத்திரி பூத்திரி ஏத்துற வேளையில
கருவாட்டு பான கெடச்சாக்க பூன
விடுமா சொல்லடி சுந்தரி நெத்திலி வத்தலு வீசுற வாடையில
பூவாட்டம் உட்காந்து மாவாட்டும் நேரம்தான்
முன் கைய நீட்டாத முந்தான ஓரம்தான்
பூவாட தூக்காதா, பூபாளம் தாக்காதா
நீ முத்தி போன கத்திரியா புத்தம்புது பிஞ்சு
நான் முந்தாநாளு ஆளானதா எண்ணுதோ உன் நெஞ்சு
உனக்காக பொறந்தேனே எனதழகா
பிரியாம இருப்பேனே பகல் இரவா
ஒதுங்காத தொட்டு உசுப்பேத்தி விட்டு
உனக்கா ஒவ்வொரு மாதிரி நாக்குல நெஞ்சுல பச்சையா குத்திவச்சேன்
இதுதான்டி ரதம் இதுலதான் நெதம்
உன்னத்தான் உட்காரவச்சி நான் ராசாத்தி ராசனா ஊர்கோலம் வந்திடுவேன்
உன்னோடு நான் சேர திண்னேனே மண் சோறு
நேந்துதான் சாமிக்கு விட்டேனே வெள்ளாடு
ஆத்தோரம் காத்தாடும், காத்தோடு நாத்தாடும்
நான் காத்தாட்டமா நாத்தாட்டமா ஒன்னாகனும் நாளும்
நீ மாலை இடும் வேலை எது கேட்குது என் தோலும்
உனக்காக பொறந்தேனே எனதழகா
பிரியாம இருப்பேனே பகல் இரவா
உனக்கு மாலையிட்டு வருஷங்க போனா என்ன
போகாது உன்னோட பாசம்