வட்டநிலா பொட்டழகே
வாசமுள்ள பூவழகே
நட்டுவச்ச நாத்தழகே
நல்லதமிழ் பாட்டழகே
மொத்தத்துல பேரழகே
உன்ன முத்தமிட்டு கொஞ்சனுமே
சித்தமெல்லாம் ஓ நெனப்பு
சித்திரமா நிக்கிதய்யா
ரெத்தமெல்லாம் ஓன் பாசம்
ரெக்ககட்டி ஓடுதய்யா
சின்ன ஓ விரலு பட்டா
சிறகுரெண்டு மொளக்காதா
வண்ண ஓ முகத்த பாத்தா
வாழ்க்க கொஞ்சம் மாறாதோ
வட்டநிலா பொட்டழகே
வாசமுள்ள பூவழகே
நட்டுவச்ச நாத்தழகே
நல்லதமிழ் பாட்டழகே
அரண்மனையில் தொட்டி கட்டி
அரசனெல்லாம் காத்திருக்க
தெருவோர குடிசையில
தெய்வமா பொறந்திருக்க
ஒசத்தியா நீ வருவன்னு
ஊருசனம் பாத்திருக்க
ஓரமா கெடந்தோர
ஒறவாக்க பொறந்திருக்க
பஞ்சுமெத்தை புடிக்கலயா
பாசமட்டும் தேடுறியே
கந்தயிலே சிரிக்குறியே
காசுபணம் வேணாமா
அங்கெல்லாம் நீ பொறந்தா
அத்தனையும் கூடவரும்
இங்க வந்து நீ பொறக்க
என்னதான் நாங்க செஞ்சோம்
என்னதவம் நாங்க செஞ்சோம்
வட்டநிலா பொட்டழகே
வாசமுள்ள பூவழகே
நட்டுவச்ச நாத்தழகே
நல்லதமிழ் பாட்டழகே
கல்லுல வீடு கட்டுனா
கடனாகி போகுமுன்னு
நெஞ்சில செலவடிச்சு
ஒன்ன நெசமா வெச்சிருக்கேன்
மண்ணுல வீடு கட்டுனா
மடிவீணா போகுமுன்னு
மனசுல கோயிலகட்டி
மகராசா வச்சிருக்கேன்
மச்சுவீட்டு மெத்தயில
மல்லிப்பூ குத்திடுச்சோ
ஏ நெஞ்சிகுழி பள்ளத்துல
நித்தமும் தூங்கு ராசா
நிம்மதியா தூங்கு ராசா
நிம்மதியா தூங்கு ராசா
நிம்மதியா தூங்கு ராசா
நிம்மதியா தூங்கு ராசா
குருவிக்கும் கூடிருக்கு
நீ குப்பையில் ஏ பொறந்த
அந்த சிலுவைக்கி ஆசபட்டா
நீ சிசுவா பொறந்த?
துன்பங்கள தாங்கணுமே
துரோகங்கள பாக்கணுமே
அவமான சின்னத்தயே
நீ அடையாள மாக்கணுமே
நெருஞ்சியில நடக்கணுமே
நீண்ட தூரம் போகணுமே
கருஞ்சிவப்பு ரத்தம் சிந்தி
கல்வாரி ஏறணுமே (2)
கன்னிமரி பெத்தெடுத்த
கருண மகராசா
அதுக்கு இன்னும் கொஞ்ச நாளிருக்கு
இப்போது நீ தூங்கு
ஏ யேசுராசா நீ தூங்கு
மகராசா நீ தூங்கு
ஏ ராசா நீ தூங்கு
ஆரிரரோ ஆரிரரோ…