Оберіть трек для відтворення
உன்ன போல ஒருத்தர நான் பாத்ததே இல்ல
உன் உசரம் பார்த்து வானம் கூட குறுகுமே மெல்ல
உன்ன போல ஒருத்தர நான் பாத்ததே இல்ல
உன் உசரம் பார்த்து வானம் கூட குறுகுமே மெல்ல
சாமிபோல வந்தவனே
கேட்கும் முன்னே தந்தவனே
நான் வணங்கும் நல்லவனே
நல்ல உள்ளம் கொண்டவனே
என் ஒட்டு மொத்த சென்மத்துக்கும் சொந்தம் நீ தானே
உன்ன போல ஒருத்தர நான் பாத்ததே இல்ல
உன் உசரம் பார்த்து வானம் கூட குறுகுமே மெல்ல
உன்ன போல ஒருத்தர நான் பாத்ததே இல்ல
உன் உசரம் பார்த்து வானம் கூட குறுகுமே மெல்ல
உன்னை எதிர்பார்த்து தான் என் இதயம் வாழ்ந்ததோ
தன்னை அறியாமலே உன்னை அது சேர்ந்ததோ
இல்லை இனி ஏதும் என்று வாடி நின்ற போதிலே
முத்துமணி தேரில் என்னை ஏற்றி வந்த வள்ளலே
ஒரு வார்த்தையில் என்னை உறவாக்கினாய்
உன் உறவென்பது யுக யுகங்களை கடந்தது தானே
உன்ன போல ஒருத்தர நான் பாத்ததே இல்ல
உன் உசரம் பார்த்து வானம் கூட குறுகுமே மெல்ல
உன்னுடைய சாலையில் நின்று மலர்த்துவவே
கன்னி வரம் கேட்கிறேன் நானும் அரங்கேறவே!
உன்னருகில் வாழ்வதொன்று போதும் இந்த மண்ணிலே
வேறு ஒன்றும் தேவையில்லை யாவும் உந்தன் அன்பிலே
எனை ஆளவே வந்த மகராசனே
நான் உனக்காகவே பல பிறவிகள் துணை வருவேனே
உன்ன போல ஒருத்தர நான் பாத்ததே இல்ல
உன் உசரம் பார்த்து வானம் கூட குறுகுமே மெல்ல
உன்ன போல ஒருத்தர நான் பாத்ததே இல்ல
உன் உசரம் பார்த்து வானம் கூட குறுகுமே மெல்ல
சாமிபோல வந்தவனே
கேட்கும் முன்னே தந்தவனே
நான் வணங்கும் நல்லவனே
நல்ல உள்ளம் கொண்டவனே
என் ஒட்டு மொத்த சென்மத்துக்கும் சொந்தம் நீ தானே