Сингл / Трек
தரை இறங்கி வந்த மேக வெண்ணிலா
நீயே தன் பூமி என்றதோ
குறுஞ்சிறகினில் பெருமலையினை
ஏன் ஏற்றினாய்
சுருங்கிடும் வானை காட்டினாய்
வெறும் குமிழியில் புது நிறங்களை
ஏன் ஊற்றினாய்
இருண்டிடும் உலகை தீட்டினாய்
எறும்புகள் நசுங்கும் போதிலும்
உயிருடன் தத்தி போகுதே
இருதயம் நொறுங்கும் போதிலோ
உயிர் எனை விட்டு போகுதே
நீ எந்தன் கண்ணீர் என்று ஏன் ஆகினாய்
தரை இறங்கி வந்த மேக வெண்ணிலா
நீயே தன் பூமி என்றதோ
உன் நெஞ்சில் நீந்தி வந்த காதல் வெண்ணிலா
மீண்டும் மேலேறி சென்றதோ
ராமன் செய்த போரே
சீதைக்காக தானே
ஆனால் என்ன போர் இது
உணர்வே இல்லாமல் ஆனேனோ ஆயுதமாய்
உயிரே இல்லாமல் நின்றேனோ காவலனாய்
நீ எந்தன் கண்ணீர் என்று ஏன் ஆகினாய்